வீட்டு கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

மதுரை, மே 17: மதுரையில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை தாசில்தார்நகரை சேர்ந்தவர் நடராஜன். இவர் நெல்லை மருத்துவக்கல்லூரியில் படிக்கும் தனது மகளை பார்க்க கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.59 ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories: