மேலூர், மே 17: திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான மேலூர் திருவாதவூர் வேதநாயகி அம்பாள் உடனுறை திருமறைநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்விழா கடந்த மே 9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து மே 13ல் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி மேலூருக்கு எழுந்தருளும் மாங்கொட்டை திருவிழா நடைபெற்றது.