வாடிப்பட்டி, மே 17: வாடிப்பட்டி அருகே மாட்டுத்தீவன தொழிற்சாலைக்குள் புகுந்த இருதலை மணியன் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு செல்லும் சாலையில் மாடு மற்றும் கோழி தீவனம் மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று பணியாளர்கள் மாட்டுதீவனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாக்குமூட்டைகள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் சுமார் 4 அடி நீளமுள்ள அரியவகை இருதலைமணியன் பாம்பு இருப்பதை கண்டனர். பின் அதை தொழிலாளர்களே பிடித்து பாதுகாப்பாக சாக்கு பைக்குள் அடைத்து வைத்தனர்.