தபால் ஓட்டு போட்டாச்சு... இரண்டு பெண்களிடம் ஏழு பவுன் நகை பறிப்பு

மதுரை, மே 17: மதுரையில் போலீஸ்காரரின் மாமியார், இன்ஜினியர் மனைவி ஆகியோரிடம் 7 பவுன் நகையை பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை ஒத்தக்கடை பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் இந்தோ திபெத் பார்டரில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் விடுமுறையில் மதுரை வந்துள்ளார்.

ஏப்.18ம் தேதி தனது குடும்பத்துடன் சித்திரை திருவிழாவில் கள்ளழகரை தரிசனம் செய்ய தல்லாகுளம் பகுதிக்கு வந்தனர். அப்போது அவரது மாமியார் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை கூட்ட நெரிசலில் மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து ஈஸ்வர மூர்த்தி தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை உத்தங்குடி டி.எம்.நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் டூவீலரில் விஸ்வநாதபுரத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் சர்வேயர் காலனி பகுதியில் வந்த கொண்டு இருந்தார்.

அப்போது இவரது டூவீலருக்கு பின்னால் மற்றொரு டூவீலரில் வந்த 2 பேர், கண்ணன் மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து கண்ணன் புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: