தஞ்சை, மே 17: தஞ்சையில் உள்ள 2 வார்டுகளில் ரூ.2.64 லட்சம் மதிப்பில் அம்ரூத் திட்டத்தின்கீழ் பூங்காக்கள் அமைக்கும் பணியை தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் தொழில் வளர்ச்சி நிறுவன தர கட்டுப்பாட்டு அலுவலர் சம்பத் ஆய்வு செய்தார்.
தஞ்சை மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 16, 17ம் வார்டுகளில் அம்ரூத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் 6 பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கேஎம்எஸ் நகர், ஸ்ரீராம் நகர், அருளானந்த நகர் 8வது தெரு, சாந்தி நகர், ரயில் நகர் ஆகிய இடங்களில் பூங்கா அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புல்தரை, நீர் ஊற்று, சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், சீசா, பெரியோர் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 6 பூங்காக்களும் ரூ.2.64 கோடியில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் தொழில் வளர்ச்சி நிறுவன தர கட்டுப்பாட்டு அலுவலர் சம்பத் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ், சந்திரபோஸ், சித்ரா உடனிருந்தனர்.