மகளிர் குழுவுக்கு கட்ட பணம் இல்லை வீட்டுக்கு பூட்டு போட்டதால் அதிர்ச்சியில் முதியவர் சாவு

திருவையாறு, மே 17:  திருவையாறு அடுத்த கண்டியூர் ரஹிம்நகர் பாப் காலனியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (58). இவரது மனைவி ஜம்ருத்பேகம் (50). இவர்களது மகள் சமுருன்னிஷா (33). இந்நிலையில் திருவையாறில் இயங்கி வரும் ஒரு தனியார் மகளிர் குழுவில் ரூ.10 ஆயிரத்தை கடனாக ஜம்ருத்பேகம் வாங்கியுள்ளார். இதற்காக ஒவ்வொரு வாரமும் ரூ.500 கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று குழு பணம் கட்டவில்லை. இதனால் தனியார் மகளிர் குழுவின் பணியாளர், சாகுல் ஹமீது வீட்டுக்கு வந்தார். பின்னர் பணம் கட்டாததால் சாகுல் ஹமீதுவை வீட்டிலிருந்து வெளியேற்றினார். இதையடுத்து சாகுல் ஹமீது வீட்டை பூட்டி விட்டு பணியாளர் சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சாகுல் ஹமீது திடீரென அதிர்ச்சியில் இறந்தார். திருவையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகி–்ன்றனர்.

Related Stories: