பொக்லைன் மோதி நாட்டு வைத்தியர் பலி

ஒரத்தநாடு, மே 17:  ஒரத்தநாடு அருகே நெய்வாசல் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அய்யாபிள்ளை (64). நாட்டு வைத்தியர். இவர் நேற்று காலை அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பொக்லைன் இயந்திரம், அய்யாப்பிள்ளை மீது மோதியது. இதில் சக்கரம் ஏறி அந்த இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு போலீசார் வந்து பொக்லைன் இயந்திர டிரைவரான புதுக்கோட்டை பாப்பான்விடுதியை சேர்ந்த ராேஜஸ்வரனை (25) கைது செய்தனர்.

Related Stories: