தூத்துக்குடி, மே 17: தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்ஐ வேல்பாண்டி மற்றும் போலீசார், செல்வநாயகபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கும்பல் சந்தேகத்திற்கிடமாக பைகளுடன் நின்று கொண்டிருந்தது. அவர்களை போலீசார் மடக்கினர். விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி கேவிகே நகரை சேர்ந்த பாலமணிகண்டன்(20), பேரூரணியை சேர்ந்த மருதவேல் என்ற பப்படு(25) அண்ணாநகரை சேர்ந்த கனகராஜ் என்ற ராசுக்குட்டி(27) மற்றும் மட்டக்கடையை சேர்ந்த மரிய அந்தோணி ஆக்னல்(21) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.