தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

தூத்துக்குடி, மே 17:  தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்ஐ வேல்பாண்டி மற்றும்  போலீசார், செல்வநாயகபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கும்பல் சந்தேகத்திற்கிடமாக பைகளுடன் நின்று கொண்டிருந்தது. அவர்களை போலீசார் மடக்கினர். விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி கேவிகே நகரை சேர்ந்த பாலமணிகண்டன்(20), பேரூரணியை சேர்ந்த  மருதவேல் என்ற பப்படு(25) அண்ணாநகரை சேர்ந்த கனகராஜ் என்ற ராசுக்குட்டி(27)  மற்றும் மட்டக்கடையை சேர்ந்த மரிய அந்தோணி ஆக்னல்(21) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து 2 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். இவர்கள் 4 பேர் மீதும் ஏற்கனவே கொலை முயற்சி, கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: