குளத்தில் மூழ்கி மாணவன் பலி

ஓட்டப்பிடாரம், மே 17:  மணியாச்சி அருகே உள்ள ஐயப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன்  உடையார் கண்ணன் (14), கடம்பூர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறையை முன்னிட்டு நண்பர்களுடன் அங்குள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றான்.  அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சேற்றில் சிக்கி மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினான். அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு நெல்லை  அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் வழியிலேயே அவன் உயிரிழந்தான்.  இதுகுறித்து நாரைக்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Related Stories: