×

அன்னவாசலில் பஸ் மோதி 3 பேர் படுகாயம்

புதுக்கோட்டை, மே 17: புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறைக்கு ஒரு தனியார் பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை இலுப்பூரை சேர்ந்த சையது முகமது (27) ஓட்டினார். பஸ் அன்னவாசல் காவல் நிலையம் அருகே சென்றபோது சாலையோரத்தில் நடந்து சென்ற 3 பேர் மீது பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் பேருந்தை சம்பவ இடத்திலேயே நிறுத்திவிட்டு  ஓட்டுநனரும், நடத்துனரும் போலீசில் தஞ்சமடைந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமுற்றவர்களை மீட்டு ஆம்புலன்சில் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தடந்து சென்ற 3 பேரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (35), பாலகிருஷ்ணன் (55), சின்னத்துரை (42) ஆகியோர் என்பதும், அன்னவாசலுக்கு பெயின்டிங் வேலை செய்ய வந்ததாகவும், இரவு சாப்பிடுவதற்காக சாலையோரத்தில் நடந்து வந்தபோது விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது. இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.


Tags : Annavasal ,
× RELATED தந்தையை அடித்து கொன்ற மகன்: கிணற்றுக்குள் குதித்து தற்கொலை முயற்சி