விராலிமலை தாலுகா காளப்பனூர் அரசகுடிப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ்(65). விவசாயி. இவர் நேற்று மாலை விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் விராலிமலைக்கு சென்றார். விராலூர் பிரிவு சாலை அருகே சென்ற போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி சைக்கிள்மீது மோதியது. இதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி பெயிண்டர் பலி:
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அடுத்த தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த தாமோதரன் மகன் பவித்ரன் (20). பெயிண்டரான இவர் நேற்று சொந்தவேலை காரணமாக மொபட்டில் புதுக்கோட்டைக்கு வந்து திரும்பி சென்றார். அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாரத விதமாக லாரி மொபட் மீது மோதியது. இதில் பவித்ரன் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் போலீசார் பவித்ரன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.