×

கறம்பக்குடி அருகே தந்தை, மகனுக்கு கம்பி அடி இருவருக்கு வலை வீச்சு

கறம்பக்குடி, மே17: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இலை கடி விடுதி கிராமம் நட்டுப்பட்டி  பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த  வீரையா குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக இடப் பிரச்னை இருந்து வந்தது. இதன் காரணமாக இரு குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பத்தன்று  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்  வீரையா  மகன்கள்  விஸ்வநாதன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து கருணாநிதி மற்றும் அவரது மனைவி இருவரையும்  அவதூறாக பேசி  கம்பி மற்றும் உருட்டு  கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கருணாநிதி மகன் ஸ்டீபன்  கேட்டபோது, அவரையும் தாக்கி மூவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் விஸ்வநாதன், விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Karambukudi ,
× RELATED கறம்பக்குடி பகுதியில் மது பதுக்கி விற்றவர் கைது