மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக பிரமுகர்

புதுக்கோட்டை, மே 17:  புதுக்கோட்டை அதிமுக பிரமுகர் கே.பி.ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தூத்துக்குடி ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி முன்னாள் செயலாளர் கே.பி.ராஜா. புதுக்கோட்டையை சேர்ந்தவர். இவர், குடும்பத்தினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அப்போது ஸ்டாலின் மனைவி துர்கா, திமுக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் (தெற்கு) அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, (வடக்கு) கீதாஜீவன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

கே.பி.ராஜா கூறுகையில், தொண்டர்கள் விரும்பாத கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. ஆனால் திமுக தலைவர், நடைபயணமாக கிராமந்தோறும் சென்று மக்களை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிகிறார். அடுத்து முதல்வராக தகுதி வாய்ந்தவர். அவரது செயலால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தேன். இவ்வாறு கூறினார்.

Related Stories: