×

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது தகராறு 2 பேர் கைது

ஜெயங்கொண்டம், மே 17: ஜெயங்கொண்டம் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் இன்பசேகரன் (28). இவருக்கும் புதுக்குடி கிராமத்தை சேர்ந்த ராயர் மகன் அஜித்குமார் (21) என்பவருக்கும் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள தனியார் வங்கியில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அஜித்குமாரும். அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் விக்னேஷ் (22) ஆகியோர் சேர்ந்து இன்பசேகரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த இன்பசேகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் இன்பசேகரன் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிந்து அஜித்குமார், விக்னேஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...