×

சங்குப்பேட்டை மாரியம்மன் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

பெரம்பலூர், மே 17: பெரம்பலூர் சங்குப்பேட்டை முத்து மாரியம்மன் கோயிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் நகராட்சியின் 11, 12, 13வது வார்டுகள் உள்ளடங்கிய சங்குப்பேட்டை பகுதியில்  முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்காக ரூ.23 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்ய கடந்த வாரம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று தேர் வெள்ளோட்ட விழா நடந்தது. மாரியம்மன் கோயிலில் புறப்பட்ட தேர் வெள்ளோட்டம் 11, 12, 13வது வார்டுகளில் சுற்றி வந்து சங்குப்பேட்டை, ரோவர் வளாகம், விளாமுத்தூர் சாலை வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. தேர் வெள் ளோட்ட விழாவில் பெரம்பலூர், துறைமங்கலம், பாளையம், குரும்பலூர், லாடபுரம், எசனை, மேலப்புலியூர், சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்றனர்.

Tags : Sankupet Mariamman ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது