×

லாரி வாங்குவதில் முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கியவர் கைது

ஜெயங்கொண்டம், மே 17: ஜெயங்கொண்டம் அருகே லாரி வாங்குவதில் ஏற்பட்ட முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டம் அருகே லாரி வாங்குவதில் ஏற்பட்ட முன்விரோத தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கோரியம்பட்டி பாண்டியன் மகன் ரமேஷ் (27). இவர் சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மோகன் மகன் அருண்குமாருக்கும் (20) லாரி வாங்குவது சம்பந்தமாக முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோரியம்பட்டி பஸ்ஸ்டாப் அருகே ரமேஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது ரமேஷை அருண்குமாரும், வேல்ருகனும் திட்டி தாக்கினர். இதில் காயமடைந்த ரமேஷ், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிந்து அருண்குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags : Larry ,dispute ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...