வாழப்பாடி, மே 17: வாழப்பாடி அருகே சூறைக்காற்றுக்கு மரம் முறிந்து விழுந்ததில் கோயில், வீடுகள் சேதமடைந்தது. வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது திருமனூர் ஊராட்சி ஊர்நாடு பஜனை மடம் ஓம்சக்தி கோயில் அருகே இருந்த நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரத்தின் பெரிய கிளை, சூறைக்காற்றுக்கு முறிந்து கோயில் மற்றும் அருகில் உள்ள வீடுகள் மீது விழுந்தது.