இளம்பிள்ளை, மே 17: தொடர் போராட்டங்களை அடுத்து இடங்கணசாலை பேரூராட்சியில் டிராக்டர் மூலம் நேற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும், குடிநீர் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது கத்திரி வெயில் வாட்டியெடுப்பதால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட கே.கே.நகர், இ.மேட்டுக்காடு, மாட்டையாம்பட்டி, காடையாம்பட்டி, மோட்டுர், முருகன் நகர், காந்தி நகர், புவனகணபதி கோயில் தெரு, தூதனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வந்து அடுத்தடுத்து 3 நாட்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும், சாலை மறியலில் ஈடுபட்டனர்.