ஆபாச படமெடுத்து மிரட்டிய ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சேலம், மே 17:  சேலத்தில் பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. வீராணம் அருகே தைலானூர் பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன். இவரது மகன் வெங்கடேசன்(30). ரவுடியான இவர், தனது கூட்டாளி மணிகண்டனுடன் சேர்ந்து மார்ச் 22ம் தேதி கொண்டலாம்பட்டி பட்டர் பிளை மேம்பாலம் அடியில், சர்வீஸ் ரோட்டில் பைக்கில் வந்த ஆண், பெண்ணை கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர், அவர்களிடம் இருந்து  தங்க நகையை பறித்துக் கொண்டு, அந்த பெண்ணை ஆபாசமாக செல்போனில் படமெடுத்து மிரட்டினர். இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால், இவரை குண்டர் சட்டத்தில் அடைக்க, கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட கமிஷனர், வெங்கடேசனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான நகலை, மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ள வெங்கடேசனிடம் போலீசார் வழங்கினர். இவர் ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மீண்டும் 2வது முறையாக அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 

Related Stories: