×

பர்கூர் அருகே மினி லாரி மீது கார் மோதி 5 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி, மே 17:  பர்கூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மருதேப்பள்ளி கூட்ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, காரின் டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்பு சுவர்களை தாண்டி எதிர்திசைக்கு சென்றது. அப்போது, அவ்வழியே பாலகுறி கிராமத்தில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றிக் கொண்டு வந்த மினிலாரி மீது கார் மோதியது. இதில், காரும், மினி லாரியும் சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தன. இந்த விபத்தில், காரில் இருந்த 2 பேரும், மினிலாரியில் இருந்த செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி, திம்மராயன், அம்மாசி ஆகியோர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை, தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் கந்திகுப்பம் போலீசார் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Barkur ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு