×

ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி எரியும் தீயால் சுற்றுச்சூழல் பாதிப்பு

ராசிபுரம், மே 17:  ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில், அடிக்கடி பற்றி எரியும் தீயால், சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை சேகரித்து, தட்டான்குட்டை ஏரியையொட்டிய குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த குப்பைகள் மலைபோல குவிந்துள்ளது.
 
தற்போது கொளுத்தும் கோடை வெயிலால்,  குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பற்றி எரிவது வழக்கமாக உள்ளது. இதனை நகராட்சி அதிகாரிகளும் முறையாக பராமரிக்காததால், தீ மற்றும் கரும்புகை பரவி, அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் நிலை உள்ளது. மேலும், விவசாயம் பாதித்து சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் உள்ளது. எனவே, குப்பைகளை அகற்றி, தீ பிடிப்பதை தவிர்க்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags : fire ,Rasipuram ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா