×

பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை

பரமத்திவேலூர், மே 17:  பரமத்திவேலூரை அடுத்துள்ள அய்யம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (65) என்பவரது கூரை வீட்டின் மீது அருகில் இருந்த வேப்ப மரம் வேரோடு முறிந்து விழுந்ததில், கூரை வீடு முழுமையாக சேதமடைந்தது. இதில் வீட்டினுள் உறங்கி கொண்டிருந்த ஆறுமுகம்(65), அவரது மகள் கவிதா(44), கவிதாவின் மகன் அஜித்(21) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அப்பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.

Tags :
× RELATED கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும்