காரிமங்கலம், மே 17: காரிமங்கலம் அருகே அண்ணாமலைஅள்ளியில் காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை, பயன்பாட்டிற்கு கொண்டு வர ேவண்டும் என மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம் ஒன்றியம் அண்ணாமலைஅள்ளியில், ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், கடந்த 20142015ம் ஆண்டு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்குவதற்காக, ₹2லட்சம் மதிப்பீட்டில், 5ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பணிகள் முடிந்து 3ஆண்டுகளாகியும், பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், ஒகேனக்கல் குடிநீர் ஏற்றி விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.