×

அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் உண்டியல் திறப்பு

தர்மபுரி, மே 17:அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதியமான்கோட்டையில் உள்ள காலபைரவர் கோயிலுக்கு வரும் தமிழக, ஆந்திரா மற்றும் கர்நாடகா பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. நேற்று கோயிலில் உள்ள காணிக்கை உண்டியல்கள், இந்து சமய அறநிலையத்துறை தர்மபுரி மாவட்ட உதவி கமிஷனர் நித்யா மற்றும் சேலம் உதவி கமிஷனர் குமரேசன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு, காணிக்கையை எண்ணும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல்களில் ₹8 லட்சத்து 90 ஆயிரத்து 81 ரொக்க பணம், 9 கிராம் தங்கமும், 62 கிராம் வெள்ளி இருந்தது. உண்டியல்கள் எண்ணும் பணியில் செயல் அலுவலர் சித்ரா, ஆய்வாளர் இந்திரா உள்ளிட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags : opening ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு