×

திருமணமாகாத ஏக்கத்தில் சினிமா டான்சர் தற்கொலை

சென்னை: திருமணமாகாத ஏக்கத்தில் சினிமா டான்சர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருகம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பரத் (35). நடன கலைஞரான இவர், நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். மின்சார கனவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் டான்சராக பணியாற்றி உள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் நடன குழுவிலும் பணிபுரிந்து வந்தார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குழந்தைகளுக்கும் இவர்தான் நடன பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், இவர் பல ஆண்டுகளாக திருமணம் ெசய்ய பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சரியான வாழ்க்கை துணை அமையவில்லை. இதுபற்றி சக நண்பர்களிடம் கூறி வேதனையடைந்துள்ளார். இதனால், கடந்த ஒரு வாரமாக மன வேதனையில் இருந்து வந்த பரத், அறையில் உடன் தங்கியுள்ள சக நண்பர்களிடமும் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பரத் வழக்கம்போல் அறையில் படுத்து இருந்தார். நேற்று காலையில் சக நண்பர்கள் எழுந்து பார்த்தபோது பரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் பரத்துடன் தங்கி இருந்த சக நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : suicide ,Cinema Dancer ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை