பெரம்பூர்: வண்ணாரப்பேட்டை டி.எச்.ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது (எ) சின்னத்தம்பி (50). பெயின்டர். இவரது மனைவி, 2 குழந்தைகளுடன் அதிராமப்பட்டினம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் செஞ்சியை சேர்ந்த கட்டிட வேலை செய்யும் மீனா (49) என்பவருடன் சின்னத்தம்பிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள், ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். மேலும், இருவரும் இரவு நேரங்களில் ஒன்றாக மது அருந்துவார்கள் என கூறப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு மது அருந்தும்போது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த மீனா 2வது மாடியில் இருந்து கீழே குதித்து, படுகாயமடைந்தார்.