×

திருவல்லிக்கேணியில் காஸ் கசிவால் தீவிபத்து: சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

சென்னை: திருவல்லிக்கேணி எஸ்.எம்.வி.கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில் (38). இவர், அப்பகுதியிலேயே 3 வீடுகள் வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீடுகளில் ஆந்திராவை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.  நேற்று முன்தினம் இரவு ராஜூ என்பவரின் வீட்டில் காஸ் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. இதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர்.

கொழுந்து விட்டு எரிந்த காஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் வீடு முழுவதும் சேதமடைந்து பொருட்கள் எரிந்து நாசமானது. தீ மளமளவென அருகில் இருந்த வீடுகளிலும் பரவியது. தகவலறிந்து திருவல்லிக்கேணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் செந்தில் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

Tags : gas leak ,
× RELATED எண்ணூர் அமோனியா வாயு கசிவு விவகாரம்:...