திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று முக.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்த போது, மேல அனுப்பானடி காய்கறி மார்க்கெட்டுக்கு வந்தார். அங்கு வாகனத்திலிருந்து இறங்கிய ஸ்டாலின், மார்க்கெட்டுக்குள் நடந்தே சென்று வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்குகள் கேட்டு, ஆதரவு திரட்டினார். அப்போது காய்கறி வியாபாரிகள் ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும் ஸ்டாலின் கைகளை பிடித்து குலுக்கியபடி தங்களது ஆதரவை தெரிவித்து மகிழ்ந்தனர். பின்னர் வியாபாரிகளிடம் காய்கறிகளின் விலைகளை கேட்டறிந்தார்.