டூவீலர் கவிழ்ந்து வாலிபர் சாவு

திருமங்கலம், மே 16: திருமங்கலம் அருகே டூவீலர் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்தார். பேரையூர் அருகேயுள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் ஜீவானந்தம்(29). டிரைவர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரைக்கு டூவீலரில் சென்றார். திருமங்கலத்தை அடுத்த தோப்பூரில் சென்றபோது டூவீலர் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் தூகிவீசப்பட்டு ஜீவானந்தம் படுகாயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மனைவி தாரணி கொடுத்த புகாரில் ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: