திருவெறும்பூர் பகுதியில் வாகன தணிக்கை ரூ.1.46 லட்சம் அபராதம் வசூல்

திருவெறும்பூர், மே 16:   வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் திருவெறும்பூர் எல்லைக்குட்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராமன் வாகன தணிக்கை செய்ததில் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். திருவெறும்பூர் பகுதி வட்டார போக்குவரத்து கழக மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராமன்  கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை திருவெறும்பூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 249 வாகனங்களை தணிக்கை செய்தார். அப்போது தகுதி சான்று புதுப்பிக்காத, சாலை வரி செலுத்தாத 7வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு இணக்க கட்டணமாக ரூ.16 ஆயிரத்து 500ம், சாலை வரியாக ரூ.ஒரு லட்சத்து 4 ஆயிரமும் வசூலிக்கப்பட்டது. மேலும் ரூ. 25 ஆயித்து 500 இணக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.  வாகன தணிக்கையின்போது புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த ஆம்னி பேருந்துகள் தமிழக அரசு சாலை வரி செலுத்தாமல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சுந்தர்ராமன் தெரிவித்தார்.

Related Stories: