கும்பகோணத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது

கும்பகோணம், மே 16: கும்பகோணம் ஹாஜியார் தெருவை சேர்ந்தவர் முகம்மது ஜெயின் (45). இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று  முன்தினம் இரவு கும்பகோணம் கக்கன் காலனி சேர்ந்த முருகன் (42), அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (38) ஆகியோர் முகம்மது ஜெயினின் செல்போன் கடையில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 4 செல்போன்களை திருடினர். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் முகம்மது ஜெயின் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து முருகன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: