கும்பகோணம், மே 16: மேற்கு வங்கம் மாநிலம் மல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகன் ஷேக் மகன்கள் ஜெலில்ஷேக் (22). ஜெவுல் ஷேக்(19). இருவரும் கும்பகோணம் பைபாஸ் சாலை பகுதியில் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கும்பகோணம் கொரநாட்டுகருப்பூர் பைபாஸ் சாலையில் மின்கம்பங்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின்கம்பம் ஜெவுல் ஷேக் மீது விழுந்ததில் படுகாயமடைந்த அவர் அந்த இடத்திலேயே பலியானார்.