புதுச்சேரி, மே 15: மார்க்சிஸ்ட் கம்யூ., பிரதேச ெசயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலம், நிலத்தடி நீரையே குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் நம்பியிருக்கிறது. பெருகி வரும் ரசாயன ஆலைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றின் அளவுக்கு அதிகமான தண்ணீர் பயன்பாட்டினால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து உப்புநீர் உட்புகுந்து இருக்கிறது, சுற்றுசூழல் மாசு அடைந்திருக்கிறது. விவசாயம் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகி வறட்சியால் ஏழை, எளிய மக்களும், கால்நடைகளும் கடுமையான விளைவுகளை சந்திக்கின்றனர். தொடர்ந்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க நாள்தோறும் போராடி வருகின்றனர். இச்சூழலில் மத்திய அரசு மேலும் விவசாயத்தையும், அதை நம்பியிருக்கிற லட்சக்கணக்கான மக்களையும், மீனவ சமுதாயத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமலாக்க துடிக்கிறது. இத்திட்டத்திற்கு புதுச்சேரி அரசு, அனுமதி அளிக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. புதுச்சேரி அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. புதுச்சேரி அரசின் சுற்றுசூழல் துறைக்கு தெரியாமலே மத்திய அரசு எல்லைகளை வரையறுத்து அனுமதி வழங்கியிருக்கிறது.