×

ஆடு மேய்ந்த தகராறில் 3 பேர் மீது வழக்கு

முஷ்ணம், மே 15: முஷ்ணம் மேல்கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் பூமாலை (45). இவருக்கு சொந்தமான தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் மனைவி விஜயலட்சுமி என்பவர் ஆடு மேய்த்துள்ளார். இதனை பூமாலை மனைவி கலைச்செல்வி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி (40), அவரது கணவர் வேல்முருகன் (46), மருமகன் சூர்யபிரகாஷ் (23) ஆகியோர் கலைச்செல்வியை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதை தடுக்க முயன்ற பூமாலை, அவரது மகள் சக்திதேவி ஆகியோரையும் தாக்கியுள்ளனர்.  இதுகுறித்து பூமாலை முஷ்ணம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், விஜயலட்சுமி உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது