×

ஆமை வேகத்தில் நடக்கும் சிமெண்ட் சாலை பணி

முஷ்ணம், மே 15: முஷ்ணம் அருகே நாச்சியார்ப்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.76 லட்சம் மதிப்பில் 600 மீட்டர் அளவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் மந்தமாக நடப்பதால், அந்த வழியை கடந்து நெடுஞ்சேரி, அம்பூஜவள்ளிபேட்டை, சாத்தாவட்டம் கானூர், பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பொதுமக்கள் அரசு பணியாளர்கள், விவசாயிகள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.எனவே சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து போக்குவரத்து வசதியை செயல்படுத்த அரசு முற்படவேண்டும் என பல்வேறு கிராம பொதுமக்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...