மீனம்பாக்கம்: வேலூரில் மருத்துவ சிகிச்சை பெற்று சொந்த ஊர் திரும்பிய பீகார் வாலிபர், விமான நிலையத்தில் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ரமேஷ்வரார். இவரது மகன் ராஜீவ்குமார் (22). இவருக்கு வயிற்றில் கட்டி மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது. அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால், கடந்த 15 நாட்களுக்கு முன் ரமேஸ்வரார் தனது மகன் ராஜீவ்குமாரை பாட்னாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தார். பின்னர், வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து நேற்று காலை அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். இதையடுத்து, தந்தை, மகன் இருவரும் சொந்த ஊரான பாட்னாவுக்கு புறப்பட்டனர்.