புழல்: புழல் அடுத்த சோழவரம் - ஆத்தூர் பைபாஸ் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டி விட்டு விற்பனையாளர் ரமேஷ் (45), மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் வீடுட்டுக்கு சென்றனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை சோழவரம் போலீசார் ரோந்து சென்றபோது, டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு இருப்பதை கண்டனர். உடனே கடையின் விற்பனையாளர் மற்றும் மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.