அண்ணாநகர்: முகப்பேர் கிழக்கு ஜானகி கார்டன் சர்ச் சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). இவரது மகன்கள் சந்தோஷ் (எ) பழனியப்பன் (16), சஞ்ஜய் சரவணன் (15). இவர்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் சரியாக படிக்கவில்லை என்று, கடந்த 10ம் தேதி செந்தில்குமார் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த சந்தோஷ், சஞ்ஜய் ஆகிய இருவரும், தந்தையின் ஏடிஎம் கார்டு மற்றும் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வௌியேறினர்.