புதுச்சேரி, மே 14: புதுச்சேரி மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்தால் விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என புதுச்சேரி விவசாயிகள் அறிவித்துள்ளது.இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் கீதநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், பாகூர், வில்லியனூர் கொம்யூன் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிகிறது. புதுச்சேரி அரசை கலந்து ஆலோசிக்காமலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்தை கேட்காமலும் தான்தோன்றித்தனமாக செயல்படும் மத்திய பாஜக அரசின் இந்த செயல்பாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாழ்படுத்தும் போக்காகும்.