திண்டிவனம், மே 14: ஒலக்கூர் பகுதி விவசாயிகள் கோடைஉழவு செய்து அதிக மகசூல் பெற வேண்டுமென ஒலக்கூர் வேலாண்மை உதவிஇயக்குனர் சுமதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி கூறுகையில், விவசாயிகள் ஏப்ரல், மே மாத கால இடைவெளியில் சாகுபடி நிலத்தை தரிசாக போடாமல் சட்டிக்கலப்பை கொண்டு உழவு செய்ய வேண்டும். இந்த கோடை உழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டிப்போடுவதால் மண்ணில் நாள்பட இறுக்கமாக உள்ள இடம் தளர்த்தப்பட்டு இலகுவாகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது.