கள்ளச்சாராயம் விற்ற 4பேர் கைது

திருக்கோவிலூர், மே 14: திருக்கோவிலூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.  அப்போது ரிஷிவந்தியத்தை சேர்ந்த கலியபெருமாள்(49), திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்த வேலு(42), பாலு(40), நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன்(52) ஆகிய 4பேரையும் போலீசார் கையும் களவுமாக பிடித்து அவர்களிடம் இருந்து தலா 10லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Related Stories: