உளுந்தூர்பேட்டை, மே 14: உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பாலசந்தர் உத்தரவின் பேரில் திருநாவலூர், எலவனாசூர்கோட்டை, எடைக்கல், உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் டோல்கேட் அருகில், பேருந்து நிலையம் பகுதியில் குடிபோதையிலும், லைசென்சு இல்லாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும், அதிக வேகத்துடனும் இருசக்கர மற்றும் கனரக வாகனங்களை ஓட்டிச் சென்ற 49 வாகன ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.