நாங்குநேரி, ஏப். 26: நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி சுந்தரி (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ஆரல்வாய்மொழியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சுந்தரி தினமும் பஸ் அல்லது ரயிலில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். கடந்த டிச.28ம் தேதி கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய சுந்தரி மாலையில் தனது தம்பி மற்றும் தங்கையுடன் மொபட்டில் மீனவன்குளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், நாங்குநேரி டோல்கேட் அருகே உள்ள காட்டுப்பாதையில் வழிமறித்தனர். கத்தியைக் காட்டி மிரட்டி சுந்தரி காதில் அணிந்திருந்த 3 கிராம் தங்க கம்மலை பறித்துக் கொண்டு தப்பினர்.