புளியங்குடி, ஏப். 26: சொக்கம்பட்டி எஸ்எஸ்ஐ ரவி மற்றும் போலீசார் நேற்று சிங்கிலிபட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சிங்கிலிபட்டி ஓடை பகுதியில் இருந்து மணல் அள்ளி வந்த டிராக்டரை மடக்கி பறிமுதல் செய்தனர். மேலும் மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் டிரைவர் சிவராமபேட்டையை சேர்ந்த கணேசனை (30) போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய டிராக்டர் உரிமையாளர் மாரியப்பன் (40) என்பவரை தேடி வருகின்றனர்.