வண்ணார் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம்

நெல்லை, ஏப். 26: வண்ணார்மக்கள் இயக்க மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் கயத்தாறில் நடந்தது. கயத்தாறு செங்கமுடையார் சாஸ்தான் கோயில் வளாகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு அய்யனார் தலைமை வகித்தார். வக்கீல் அருள்ராஜ் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் 7 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு அமைக்கப்பட்டதோடு மாநில அளவிலான தமிழ்நாடு வண்ணார் மக்கள் இயக்கம் என்ற புதிய அமைப்பிற்கு பதிவுஎண் வாங்கி சிறப்பாக இயக்கத்தை வழிநடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் சங்கரசுப்பு, ஜெயக்குமார், செல்லத்துரை, மதி, கோட்டூர் கணேசன் மற்றும் அழகியபாண்டியபுரம் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  கூட்டத்தில் அமைப்பாளர் ஜெமினி நன்றி கூறினார்.

Related Stories: