பிரபல பைக் திருடன் சுற்றிவளைத்து கைது : 13 பைக்குகள் பறிமுதல்

சென்னை: சென்னை சவுகார்பேட்டை, கொண்டிதோப்பு, ஏழுகிணறு பகுதிகளில் அடிக்கடி பைக் திருட்டு நடைபெற்று வந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்படி போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். ஏழுகிணறு பகுதியில் நேற்று முன்தினம் மாலை பைக்கை ஒருவர் திருட முயன்றபோது பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து ஏழுகிணறு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ‘‘சாலிகிராமத்தை சேர்ந்த நாசர் (45) என்பதும் சவுகார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பைக் திருட்டில் ஈடுபட்டவர் என்பதும்’’ தெரியவந்தது. அவரிடம் இருந்து 13 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நாசரிடம் பைக் திருட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: