அக்‌ஷயா நிறுவனம் சார்பில் மலிவு விலை வீடுகள் அறிமுகம்

சென்னை: தமிழ்நாட்டில் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான அக்‌ஷயா பிரைவேட் லிமிடெட் ஏழை எளியோர்களும் பயன்பெறும் வகையில் மலிவு விலை குடியிருப்பு வீடுகள் துறையில் கால்பதிக்கிறது. திருப்போரூர் அருகே “வான் மேகம்” மற்றும் “மண் வாசனை” என்ற பெயர்களில் தனது 158வது மற்றும் 159 கட்டுமான செயல்திட்டங்கள் தொடங்குகிறது. பிரபலமான தொழிலகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பொழுதுபோக்கு கேளிக்கை மற்றும் ரீடெய்ல் வளாகங்கள் ஆகியவற்றிற்கு அருகில் இக்குடியிப்பு திட்டங்கள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

10.99 லட்சம் மற்றும் 23.71 லட்சம் என்பதற்கு இடைப்பட்ட விலைப்பிரிவில் இவ்வீடுகள் கிடைக்கப்பெறும். விரைவில் திருப்போரூர் - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை செயல்பாட்டிற்கு வரும் என்பதால், அறிவார்ந்த முறையில் சிந்தித்து வீடுகளை வாங்குகின்ற அனைவருக்கும் மிக விவேகமான முதலீட்டு யோசனையாக இக்குடியிருப்பு திட்டங்கள் இருக்கும். சிறந்த வடிவமைப்பு வசதிகள் இருப்பினும், மிக மலிவான விலையில் இவ்வீடுகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கவர்ச்சிகரமான விலையில் இவ்வீடுகளை வாங்குபவர்களுக்கு முழு திருப்தி அளிக்கும் என்பது நிச்சயம் என்று அக்ஷா பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் மற்றும் தலைமைசெயல் அலுவலர் டி.சிட்டிபாபு கூறினார்.

Related Stories: