சென்னை: திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலை சீரமைக்க, இந்து அறநிலையத்துறை சார்பில் கடந்த 2016-17ம் ஆண்டு ₹1 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக டெண்டர் விடப்பட்டு எஸ்.கே.சண்முகம் என்பவரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் பணியை முடித்து கொடுக்காமல் கிராம மக்களை அணுகி, ‘‘நான் ₹50 ஆயிரம் பணம் தருகிறேன். நீங்களே கோயிலை சீரமைத்துக் கொள்ளுங்கள். பணிகளை செய்து கொண்டிருக்கும்போது மீதி பணத்தை வழங்குகிறேன்’’ என கூறியுள்ளார். இதன் பிறகு ஒப்பந்ததாரர் அகூர் கிராமத்துக்கு வரவே இல்லை என்று கூறப்படுகிறது. எனவே பணி செய்வதற்கு மீதி பணம் கேட்டு மக்கள் ஒப்பந்ததாரரை அணுகியபோது விரைவில் தருவதாக கூறி அலைக்கழித்து வந்துள்ளார்.