வேலூர், ஏப்.26: தமிழகம் முழுவதும் கோடைகாலம் தொடங்கிய நிலையில் ஊராட்சிகளில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நிதியின்றி ஊராட்சி செயலாளர்கள் தவித்து வருகின்றனர்.உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் தனி அதிகாரிகளால் நிர்வாகம் செய்யப்படுகிறது. ஆனாலும், உள்ளாட்சிகளின் நிர்வாகம் முழுமையாக செயல்பட முடியவில்லை. குறிப்பாக 12,523 கிராம ஊராட்சிகளில் பணியாளர்களுக்கு சம்பளம், குடிநீர் வினியோகம், தெருவிளக்கு, சுகாதார பணிகள், மின்கட்டணம் போன்ற குறிப்பிட்ட பணிகள் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கான நிதி ஊராட்சி நிதிக்குழு 1ன் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இருந்தாலும் பெரும்பாலான ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது தனி அலுவலர், மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்ட பின்னரும் ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர் தாமதம் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் நிறைவேற்றியதற்கு ஊராட்சி செயலர்கள் பில் பாஸ் செய்ய அதிகாரிகளிடம் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எந்த அடிப்படை வசதியையும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையிலும் எந்த ஒரு சிறப்பு நிதியும் வழங்கப்படவில்லை. தமிழக அரசு மாதந்தோறும் வழங்கும் பொதுநிதியும் அதிகரிக்கப்படவில்லை. இதனால் நிதியின்றி ஊராட்சி செயலாளர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி செயலர்கள் கூறியதாவது: