அலுவலகத்தின் பூட்டை உடைத்து கணினி, பணம் கொள்ளை

திருப்பூர், ஏப், 26; திருப்பூர் , அவிநாசி அருகே அலுவலக பூட்டை உடைத்து பணம், கணினி மற்றும் பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரமணி(72). இவருக்கு சொந்தமான தோட்டம் அவிநாசியை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தை அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ்(47), என்பவர் பராமரித்து வருகிறார். தோட்டத்தில் உள்ள ஓர் அறையில் ரமணி தனது அலுவலகத்தை அமைத்திருந்தார். இதில் கணினி மற்றும் அலுவலக பொருட்கள் இருந்தது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி தனது அலுவலகத்தை வழக்கம் போல் பூட்டி விட்டு ரமணி சென்றுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை அலுவலகத்தை திறப்பதற்காக சென்று பார்த்த பொழுது முன்பக்க கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கிருந்த கணினி, அலுவலக பொருட்கள், சி,சி,டி,வி. கேமிரா, மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இது குறித்து ரமணி அளித்த புகாரின் பேரில்  திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்

Related Stories: